Header Ads



5175 ருபாவாக அதிகரிக்காவிட்டால், லிட்ரோ எரிவாயுவை விநியோகிக்க முடியாது - நிறுவனம் அதிரடி அறிவிப்பு


லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதன்படி சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல் எரிவாயு விநியோகிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரொன்றின் விலையானது 5175 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக கடந்த 22ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் லிட்ரோ நிறுவன எரிவாயு விலை அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அதன்படி எரிவாயு விலை அதிகரிக்கப்படாது எனவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பழைய விலைக்கே 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே குறித்த அறிவிப்பை லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளதுடன், எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.