Header Ads



சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க 11 கட்சிகளை, பிரதிநிதித்துவப்படுத்தும் 5 உறுப்பினர்கள் நியமனம்


சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்களில் 5 பேர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.