Header Ads



தூக்கத்தினால் சமைத்துகொண்டிருந்த சட்டியில் விழுந்த நபர் - மஸ்கெலியாவில் சம்பவம்


சமைத்துகொண்டிருந்த சட்டியில்,  நபர் ஒருவர் தூக்கத்தினால் விழுந்து தீக்காயங்களுக்கு உள்ளான சம்பவமொன்று மஸ்கெலியாவில் பதிவாகியுள்ளது.

26 வயதுடைய இளைஞர் ஒருவரே சமைத்துகொண்டிருந்த சட்டியில் தூங்கி விழுந்து தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்த அவர், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

(மஸ்கெலியா செய்தியாளர் செ. தி. பெருமாள்)

No comments

Powered by Blogger.