Header Ads



புல் தின்றதற்காக 600 மாடுகள் தடுத்துவைப்பு - 5 பேர் கைது


புத்தளம் அளுத்கம 17வது கட்டை பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புல் தின்ற சம்பவம் தொடர்பாக 600 மாடுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் 5 கால்நடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

புத்தளம் வனப்பாதுகாப்பு பிரிவினரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் மாடுகள் நீதிமன்ற காவலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.