Header Ads



காவல்துறை தடுப்பில் இருந்தபோது மனிதாபிமானமற்ற தாக்குதல் - சொந்த செலவில் 10 இலட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு


காவல்துறை தடுப்பில் இருந்தபோது, மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதலுக்குள்ளான இளைஞருக்கு தலா 500,000 ரூபா வீதம் 10 இலட்சம் ரூபா இழப்பீட்டை, தமது சொந்த செலவில் வழங்குமாறு காவல்துறை அதிகாரிகள் இருவருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அநுராதபுரம் காவல்துறை அதிகாரிகள் இருவருக்கே, உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அத்துடன், வழக்கு கட்டணமாக தலா 25,000 ரூபா வீதம் 50,000 ரூபாவை செலுத்துமாறும், குறித்த காவல்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு, அநுராதபுரம் காவல்துறையின் குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் குறித்த இளைஞன், சட்டத்திற்கு முரணாக கைதுசெய்யப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டமையால், அவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்மானித்து உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

No comments

Powered by Blogger.