நீர்கொழும்பு மாநகர சபை மூத்த உறுப்பினர் கொரோனாக்கு மரணம்
- Ismathul Rahuman -
நீர்கொழும்பு மாநகர சபை ஐதேக சிரேஷ்ட உறுப்பினர் கெலிஸ்டஸ் ஜயகொடி இன்று 22ம் திகதி அதிகாலை காலமானார்.
கொவிட்19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் வீட்டிலேயே 14 நாட்கள் கடந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவர் நீண்டநாள் நீரிழிவு நோயுள்ளவராவர்.
நீர்கொழும்பு மாநகர சபையின் கெப்புன்கொட, செத்தப்பாடு பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இவர் 30 வருடங்களுக்கு மேலாக மாநகர சபை உறுப்பினராக செயல்பட்டார். ஒரு காலகட்டத்தில் எதிர்கட்சி தலைவராகவும் இருந்தார்.
இறக்கும்போது இவருக்கு வயது 63. ஒரு பெண் பிள்ளையின் தந்தையாவர்.
ஐதேக உறுப்பினரான இவர் இறுதி காலகட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவித்துவந்தார்.
அன்னாரின் பூதவுடலை நீர்கொழும்பு சேமக்காலையில் தகனம் செய்ய நீர்கொழும்பு சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Post a Comment