முதியோர் இல்லத்தில் 46 பேருக்கு கொரோனா - உள்ளே 3 பேர் உயிரிழப்பு
கண்டி- மஹியாவ பிரதேசத்திலுள்ள முதியோர் இல்லமொன்றில் தங்கியுள்ள 60 பேரில், 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் நால்வர் மரணமடைந்துள்ளனர்.
இவ்வாறு மரணமடைந்த நால்வருள் மூவர், குறித்த முதியோர் இல்லத்துக்குள்ளேயே மரணமடைந்துள்ளனர் என்றும் மற்றையவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளார் என கண்டி பிரதேச சுகாதார வைத்தியப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த முதியோர் இல்லத்தில் 60 பேர் தங்கியிருக்கின்றனர். இல்லத்தின் 6 அலுவலக உறுப்பினர்கள் உள்ளிட்ட 46 பேருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த முதியோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது என் கண்டி பிரதேச சுகாதார வைத்தியப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Post a Comment