Header Ads



பிரான்ஸில் படுகொலைக்குள்ளான இலங்கையைச் சேர்ந்த தாயும் மகளும் - குடும்பத்தினர் 3 பேர் தடுத்து வைப்பு


பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த செவ்வாய்க் கிழமை காலை கூரிய ஆயுதத்தினால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில்  பலியான தாயும், மகளும் யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூரிய ஆயுதம் ஒன்றினால் வெட்டிக்கொல்லப்பட்ட இவ்விருவரது உடல்களும், பிரேதப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. தடயங்களைக் கண்டு

பிடிப்பதில் தடயவியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றார்கள்.

கொலையுண்டவர்கள் யாழ்ப்பாணம்,உரும்பிராயைச் சேர்ந்த இராஜதுரை விஜயசிறி (51), இராஜதுரை டிலக் ஷனா (21) என அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

செவ்வாய்கிழமை காலை 10.00 மணியளவில் இருவரது சடலங்களும் அவர்களுடைய வீட்டில் இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டன.

இவர்களது கொலை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவரும் அதேவேளை, கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் இராஜதுரை

யும், அவரது இரு புதல்வர்களும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.