Header Ads



மைத்திரியின் வீட்டில் விசேட பேச்சு - எதிர்கால அரசியல் குறித்து கலந்துரையாடல்


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

நாளை (08) குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இதன்போது, நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று(06) பிற்பகல்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வீட்டில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. Tm

1 comment:

  1. களவாடுவதற்குத் திட்டமிட்ட அனைத்தும் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. இனிகளவாடுவதற்கு புதிதாகத் தேடவேண்டும்.அது அவ்வளவு இலகுவான ஒன்றல்ல எனத்திட்டம்போடும்போது குடும்பம் அனைத்தையும் சூறையாடி முடிந்திருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.