Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள் சரத் வீரசேகரவுடன், றிசாத் தொடர்பில் பேச்சு - ஜனாதிபதி தரப்பிலிருந்து நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லை


- M. ANZIR -

றிசாத் பதியுதீன், அவரது குடும்பத்தினர் கைது,  அதனால் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, முஸ்லிம் அரசியல்வாதிகள் 2 பேர், அமைச்சர் சரத் வீரசேகரவுடன் சந்தித்து உரையாடியுள்ளதாக  நம்பரகமான வட்டாரங்களில் இருந்து Jaffna Muslim இணையத்திற்கு தகவல் கிடைத்தது.

எனினும், தற்போது றிசாத் விவகாரம் தேசிய விடயமாகி, தனது கரங்களையும் மீறிச் சென்றுவிட்டதாகவும், தன்னால் எதுவும் செய்ய முடியாதெனவும், சரத் வீரசேகர 2 முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுதொடர்பில் ஜனாதிபதியுடன் நேரடியாக, உரையாடுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியுடன் இதுபற்றி நேரடியாக உரையாட, 2 முஸ்லிம் அரசியல்வாதிகளும் அனுமதி கோரியபோதும், இந்த செய்தியை எழுதும்வரை அவர்களுக்கு ஜனாதிபதி தரப்பிலிருந்து நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லை எனவும் Jaffna Muslim இணையத்திற்கு மேலும் அறிய வருகிறது.

2 comments:

  1. குற்றங்கள் செய்வதும் பின்னர் அவற்றிலிருந்து கள்ளவழியாக தப்பி, நல்லபிள்ளாக நாடகமாடுவது தான் முஸ்லிம்களின் வேலை போல

    ReplyDelete
  2. குற்றங்கள் செய்வதும் பின்னர் அவற்றிலிருந்து கள்ளவழியாக தப்பி, நல்லபிள்ளாக நாடகமாடுவது தான் முஸ்லிம்களின் வேலை போல

    ReplyDelete

Powered by Blogger.