ரணில் - சஜித் நிச்சயம் மீண்டும் ஒன்றிணைவர், அரசாங்கத்திற்குள் பிளவு ஏற்படும் - நவீன்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் நிச்சயமாக மீண்டும் ஒன்றிணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள சிறப்பு அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை கவிழ்க்க, அவர்கள் ஒன்று சேர வேண்டும், பிளவுபட்டால் ராஜபக்சர்களுக்கு எதிராக செயற்பட முடியாது.
அரசாங்கத்தின் பாதையில் மாற்றத்தை எதிர்பார்க்கும் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் அவருடன் பேசுவதாகவும், “மகிந்த மகாதயா” மகிழ்ச்சியாக இல்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் நவீன் திசாநாயக்க கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்குள் பிளவு ஏற்படும் என கூறியுள்ள அவர், அந்த பிளவை பற்றவைக்க ஐக்கிய தேசியக் கட்சி ஒரு "சிறிய ஒளியை" மட்டுமே பாய்ச்ச வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment