Header Ads



குழந்தைகள் நல்லொழுக்கம், இரக்கம் பற்றி அறிய முன்பள்ளியை ஒரு புகலிடமாக மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் - பிரதமர்

முன்பள்ளியை போட்டித்தன்மை மிகுந்த கல்வி வழங்கும் மற்றொரு பாடசாலையாக மாற்றாமல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை அனுபவிக்க இடமளியுங்கள் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (17) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் கொடுப்பனவை பெற்றுக்கொடுக்கும் 'குரு அபிமானி' தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்திற்கமைய அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் நிறுவப்பட்டுள்ள சுபீட்சத்தின் முன்பள்ளி கட்டுமானத்திற்கான 25 இலட்சம் ரூபாய் மற்றும் 1500 முன்பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 6 இலட்சம் ரூபாய் நிதி வழங்கலும் கௌரவ பிரதமரின் தலைமையில் இடம்பெற்றது

முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் கீழ் இவ்வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

No comments

Powered by Blogger.