இலங்கையின் கடலுக்குள் பேருந்துகளை இறக்க வேண்டாம் - இராமேஸ்வர மீனவர்கள் போராட்டம்
இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கைவிடப்பட்ட பேருந்துகளை இறக்கும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தக் கோரி நாளைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தமிழக இராமேஸ்வர மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
மீன்வளத்தை அதிகரிக்கும் நோக்கில் ஆழ்கடல் பகுதியில் கைவிடப்பட்ட பேருந்துகளை இறக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும், இந்த செயற்பாட்டின் காரணமாக தமது வலைகளுக்கு சேதம் ஏற்படுவதோடு படகுகளும் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனை தடுக்குமாறு கோரி நாளை (16) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராமேஸ்வரம் துறைமுக விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் தலைவர் என்.தேவதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment