Header Ads



போக்குவரத்து கட்டுப்பாடுகளை 21ம் திகதி நீக்க வேண்டாம் - ஜனாதிபதிக்கு இலங்கை மருத்துவ சங்கம் கடிதம்


போக்குவரத்து கட்டுப்பாடுகளை 21ம் திகதி நீக்கவேண்டாம் என கோரும் கடிதமொன்றை இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளது.

மிகவும் முக்கியமான இந்த தருணத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தொடருமாறு நாங்கள் ஆழ்ந்த கரிசனையுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம் என மருத்துவ சங்கம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

சில நாட்களிற்கு போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்குவது கூட ஏப்பிரல் மாதத்தில் காணப்பட்ட நிலைமையை நோக்கி நாட்டை இட்டுச்செல்லும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக காணப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாடுகளால் கிடைத்த பலாபலன்களை இழக்கவேண்டிய நிலையேற்படும் எனவும் இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. நல்ல ஆலோசனை.
    டிசம்பர் 31 வரை கொண்டு போனால் மிக நல்லது. ஏனெனில் பயணக் கட்டுப்பாட்டை நீக்கினாலும் (கீழ் மட்டத்தில் உள்ளவர்கள்) பணமும் இன்றி விலைவாசியும் கழுத்து வரை உயர்ந்திருக்க என்னதான் செய்யப் போகிறார்கள்.
    கொரோனாவை முற்றாக

    ReplyDelete

Powered by Blogger.