கொலன்னாவையில் 129 கிலோ கஞ்சா மீட்பு
கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் வீடு ஒன்றில் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 129 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகையுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 37 வயதுடைய தெமடகொடை, வெலுவன வீதி பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபர் மற்றும் கேரள கஞ்சா தொகை மேலதிக விசாரணைகளுக்காக பொிலஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Post a Comment