தேசியப்பட்டியல் Mp யாக ரணிலை நியமிக்க, UNP செயற்குழு ஏகமனதாக தீர்மானம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ளார்.
இதற்கான தீர்மானித்தை, இன்று 31.05.2021 கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு ஏகமனதாக மேற்கொண்டது.
கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இந்த தகவலை வழங்கினார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை.
எனினும் தேசிய ரீதியாக பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில், அக்கட்சிக்கு ஒரேயொரு தேசிய பட்டியல் வாய்ப்பு கிடைத்தது.
தேர்தல் நிறைவடைந்து ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், தற்போது அந்த தேசியப் பட்டியலுக்கான உறுப்பினரை கட்சி தெரிவு செய்துள்ளது.
இதன்படி, ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பெயரிடும் ஆவணம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இது யூஎன்பீ கட்சிக்கு அவமானம்,இழிவு வெடகக்கேடு, சிறைக்கு அனுப்ப வேண்டிய இந்த நபரைப் பாராளுமன்றம் உள்வாங்குவது வெட்கக் கேடான ஒரு விடயமாகும்.
ReplyDelete