கட்டணமற்ற தொலைபேசி சேவை மூலம், மாணவர்களுக்கு அரசாங்கத்தின் கல்வி வசதி
அழையுங்கள்: 1377
கைத்தொலைபேசி அல்லது நிலையான இணைப்பு தொலைபேசி ஒன்றிலிருந்து 1377 என்ற இலக்கத்தை அழைத்து உங்களுக்கான தொடர்பு மொழியைத் தெரிவு செய்வதன் ஊடாக இந்த சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
திங்கள் தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணிவரை மாணவர்கள் தமக்குத் தேவையான பாடங்களின் விளக்கங்களையும் ஐயங்களையும் இந்த சேவை ஊடாக்க் கேட்டறிய முடியும்.
இந்தச் சேவைக்காகத் தொலைபேசிக் கட்டணம் எதுவும் அறவிடப்படமாட்டாது.
இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், வீட்டிலிருந்தபடியே தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக இந்த சேவை மூலமாக பிரத்தியேக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடம் தொடர்பிலும் தமக்கு எழுகின்ற ஐயங்கள இந்த சேவை ஊடக மாணவர்கள் தீர்த்துக்கொள்ள முடியும்.
டயலொக் அக்ஷியாடா நிறுவனத்தின் பிரதான பங்களிப்புடன், தபால் மற்றும் தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் கீழ், மொபிடெல், எயார்டெல், ஹட்ச், ஶ்ரீ லங்கா ரெலிகொம், லங்கா பெல் ஆகிய தொலைபேசி சேவை வழங்குனர்கள் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் இந்த சேவையை மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
ஒவ்வொரு பாடம் தொடர்பிலும், அனுபவம் வாய்ந்த, நிபுனத்துவம் மிக்க ஆசிரியர்கள் இதற்காக மாணவர்களுடன் தொடர்புபடுத்தப்படுவார்கள்.
Good job
ReplyDeleteThanks