7 ஆம் திகதிக்குப் பின், போக்குவரத்து கட்டுப்பாடு நீடிக்குமா..? இராணுவத் தளபதியின் விளக்கம்
ஏழாம் திகதிக்குப் பின்னர் போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்து இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாளாந்த தரவுகளை மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் ஆராய்ந்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 தொடர்பான ஜனாதிபதி செயலணியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களில் எவ்வாறான நிலை காணப்படு கின்றது என்பதை அடிப்படையாக வைத்து போக்கு வரத்துக் கட்டுப்பாடுகள் குறித்து தீர்மானிக் கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தினக்குரல்
Post a Comment