தினமும் 6 ஆயிரம் தொற்றாளர் வரை அதிகரிக்கும் அபாயம்
எதிர்வரும் இரண்டு - மூன்று வாரங்களில் இலங்கையில் தினமும் அடையாளம் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரம் வரை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் உபுல் திஸாநாயக்க கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இதனை தெரிவித்துள்ளார்
அத்துடன், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகளின் எண்ணிக்கைக்கு அமையவே தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment