முஸ்லிம்களிடையே உயரும் கொரோனா மரணங்கள் - இன்று 20 ஜனாஸாக்கள் நல்லடக்கம்
- நஜிமிலாஹி -
இன்று சனிக்கிழமை (29.05.2021) 21 கொரோனா மரணங்கள் மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதில் 20 முஸ்லிம் ஜனாஸாக்களும், ஒரு பௌத்த கொரோனா மரணமும் அடங்குவதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அசனார் அக்பர் ஜப்னா முஸ்லிமுக்குத் தெரிவித்தார்.
இதன்படி சுமார் 322 கொரோனா மரணங்கள் மஜ்மா நகரில் இன்று வரையும் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்கள் ஏன் தமது நாளாந்த செய்கைகளை சீர்செய்து கொண்டு கண்ணும் கருத்துமாக இருப்பதில்லை. (இஸ்லாத்தை விளையாட்டாக எடுக்க கூடாது. இம்மை மறுமையின் விளைநிலம்.)
ReplyDelete