Header Ads



நோன்பு பெரும் அருட்­கொ­டை,­ ரம­ழானின் பயன்கள் முழு­மை­யாக கிடைக்க பிரார்த்திக்கின்றேன் - ரெஹான் (சுவாரசியமான நேர்காணல்)


கேள்வி: நீங்கள் அரசியல் பின்னணியிலான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் அரசியலில் கால் பதித்தீர்களா?

பதில்: நான் கீழ் மட்­டத்­தி­லி­ருந்து அர­சி­யலை ஆரம்­பித்­தி­ருக்­கிறேன். அதா­வது நகர சபை­யி­லி­ருந்தே ஆரம்­ப­மா­கி­யி­ருக்­கி­றது. ஆனாலும், எமது குடும்­பத்­தி­னரின் அர­சியல் செல்­வாக்கும் தாக்கம் செலுத்­தி­யி­ருந்­தது. எனது பெற்­றோர்­களோ, குடும்­பத்­தாரோ அர­சி­யலில் ஈடு­பட்­டி­ருப்­பது அர­சி­ய­லுக்­கான தகு­தியோ தகு­தி­யீ­னமோ அல்ல. ஆனாலும், எனது அர­சியல் பிர­வே­சத்­திற்கு குடும்ப அர­சியல் பின்­னணி சாத­க­மாக அமைந்­தது.

கேள்வி: உங்கள் குடும்பத்தினர் அண்மைக்காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்ததை பார்க்கிறோம். திடீரென 2018 இல் உங்கள் பிரவேசம் நிகழ்ந்தது.இதற்கு ஏதும் தனித்துவமான காரணங்கள் இருக்கின்றனவா?

பதில்: எமது குடும்­பத்தில் கூடு­த­லானோர் அர­சியல் செய்­தி­ருக்­கின்­றனர். அர­சியல் செய்த எமது குடும்­பத்தின் மூன்றாம் சந்­த­தியில் நான்தான் முதன்­மு­த­லாக அர­சி­யலில் பிர­வே­சித்­துள்ளேன். எனது சகோ­த­ரர்கள் அர­சி­ய­லுக்கு வர­வில்லை. வேறு தொழில்­களில் கவனம் செலுத்­து­கின்­றனர். டி.எஸ்.சேனா­நா­யக்க குடும்பத் தொடர்பும் ரஞ்சன் விஜே­ரத்ன மற்றும் மண்டெக் ஜெய­விக்­ரம உள்­ளிட்ட மூன்று பெரும் அர­சியல் குடும்­பத்தின் பரம்­ப­ரையை பிர­தி­ப­லிக்­கிறேன்.

கேள்வி: வெலிகம என்பது பல்லின மக்களை பிரதிபலிக்கும் தொகுதியாகும். நாட்டிலுள்ள இனவாத சூழல் உங்கள் அரசியல் பயணத்தில் எவ்வாறான தாக்கத்தை செலுத்துகிறது?

பதில்: வெலி­கம நகர் முஸ்­லிம்களின் செல்­வாக்­கு­மிக்க ஒரு பகுதி. இங்கு ஆளும் கட்­சி­யான பொது­ஜன பெர­மு­னவை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் தலை­மைகள் இருந்­த­போ­திலும் அவர்கள் அங்­குள்ள முஸ்லிம் மக்­களின் தேவைகள் மற்றும் பிரச்­சி­னைகள் குறித்து துணி­வுடன் பேச முன்­வ­ரு­வ­தில்லை. வெலி­கம மக்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வதால் அங்­குள்ள சிங்­கள மக்கள் என்­னுடன் கோபித்­த­தில்லை. வெலி­கம சிங்­கள மக்­களும் முஸ்­லிம்­க­ளுடன் ஒன்­றித்து வாழ விருப்­ப­மு­டை­ய­வர்­க­ளாக இருக்­கின்­றனர். இதை இன்­றைய புதிய மாற்­ற­மாக காண்­கிறேன்.

கேள்வி: தெற்­கி­லி­ருந்து இன்­னொரு மங்­கள உயிர்­பெ­று­கிறார் என்று எங்­களால் நம்ப முடி­யுமா?

பதில்: மங்­கள சம­ர­வீர கட்­சியின் மாவட்டத் தலை­வ­ராக இருந்­தவர். என்னை வெலி­கம நகர பிதா­வாக பரிந்­து­ரைத்­தவர். மங்­கள ஒரு தீவிர தாரா­ள­வாத அர­சி­யல்­வாதி, உண்­மையை உரைக்க பயப்­ப­ட­மாட்டார். எல்லா மதத்­தி­ன­ரையும் மதிக்கும் தன்­மை­கொண்­டவர். மங்­கள என்­கிற ஆளுமை (தனித்­துவம்)அர­சி­யலில் இருந்து ஓய்­வு­பெற்­று­விட்டார் என்று கூற முடி­யாது. அவர் எவ்­வா­றான தீர்­மா­னத்தை எடுப்பார் என்றும் ஊகிக்க முடி­யாது. எதிர்­கா­லத்தில் இலங்­கையில் ஒரு அர­சியல் புரட்­சிக்கு தயா­ராகிக் கொண்­டி­ருக்­கிறார் என்று நம்­பு­கிறேன். தெற்கில் அவ்­வா­றான ஆளுமை (தனித்­துவம்) மிகவும் குறைவு. நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த அவ்­வா­றான ஆளு­மைகள் மாவட்­டம்­தோறும் அதி­க­ம­தி­க­மாக தேவைப்­ப­டு­கின்­றனர். அப்­போதுதான் நாட்டை கட்­டி­யெ­ழுப்­பலாம். எதிர்­கால சந்­த­தி­யினர் அர­சியல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டும்­போது, இன,மத­வா­தத்­தி­லி­ருந்து விலகி ஒண்­றி­ணைந்து செயற்­படும் கொள்­கையை பின்­பற்­று­வார்­க­ளே­யானால் நாம் முன்­னேற்றம் காண முடியும்.

கேள்வி: கொவிட் ஜனாஸா பிரச்சினை நாட்டில் உருவானபோது, வெலிகம பகுதியில் பலவந்தமாக எரிப்புக்கான முஸ்தீபு இடம்பெறவிருந்த நிலையில் நீங்கள் அதனை தடுத்திருந்தீர்கள். நீங்கள் முஸ்லிம்களுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததா?

பதில்: என்­னு­டைய கொள்­கைகள் மற்றும் இயல்­பு­களை என்னால் கைவிட முடி­யாது. எனது கட்­சியில் எனக்கு அழுத்­தங்கள் ஏதும் பிர­யோ­கிக்­கவும் இல்லை. வெலி­க­மயில் ஜனாஸா எரிப்பு முஸ்­தீபு நடந்­தமை எனது பாரா­ளு­மன்ற பொதுத் தேர்தல் கால­மாகும். நான் முஸ்லிம் வாக்­கு­களை இலக்­கா­கக்­கொண்டு செயற்­ப­டு­வ­தாக குற்றம் சுமத்­தினர். மாத்­தறை மாவட்­டத்தில் 80 வீதம் சிங்­கள வாக்­கு­கள்தான் இருக்­கின்­றன. முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் 30 ஆயிரம் வரை­யில்தான் இருக்கும் என நினைக்­கிறேன். அந்த வாக்­கு­களை மட்டும் இலக்­கு­வைத்து செயற்­பட நான் முட்டாள் அல்ல. என்­னு­டைய இயல்­புதான் ஜனாஸா விட­யத்தில் நியா­ய­மாக செயற்­ப­ட­வைத்­தது. ஒவ்­வொரு இனக் குழு­மத்­திலும் கடும்­போக்­கு­வா­திகள் இருக்­கின்­றனர். அந்த அடிப்­ப­டையில் சிங்கள சமூ­கத்தில் எனக்கு வாக்­குகள் இல்­லாமல் போயி­ருக்­கலாம். குறித்த சந்­தர்ப்­பத்தில் மாத்­தறை மாவட்ட முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் மௌனித்து இருந்த போது நான் பேசி­யதை மாத்­தறை மாவட்ட முஸ்லிம் மக்கள் நன்கு அறி­வார்கள்.

கேள்வி: தெற்கில் சில உள்ளூராட்சி மன்ற அதிகார பகுதிகளில் தவிர பெரும்பாலான பகுதிகளில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உங்கள் அதிகாரத்தின் கீழிருக்கும் வெலிகம பகுதியில் மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என உங்கள் மீது ஏதும் அழுத்தங்கள் வருவதுண்டா?

பதில்: எனது தீர்­மா­னத்தில் பிர­த­மரோ, ஜனா­தி­ப­தியோ இது­வரை தலை­யி­ட­வில்லை. ஏனைய பகு­தி­களில் மாட்­டி­றைச்­சிக்கு தடை ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தாலும் நான் எந்த தடைக்கும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. ஏனை­யோ­ருக்கு மாட்­டி­றைச்சி சாப்­பி­டு­மாறு வற்­பு­றுத்­த­வு­மில்லை, மாட்டை கொல்­லு­மாறு சொல்­ல­வு­மில்லை. மாத்­தறை நகரில் முஸ்­லிம்கள் 20 வீத­மா­ன­வர்கள் இருக்­கின்­றனர். அவர்கள் மாட்­டி­றைச்சி உட்­கொள்­கின்­றனர். அவர்­களை தடுக்க முடி­யாது. மாட்­டி­றைச்சி உண்ணக்கூடாது என்­பது எனது விருப்பம். எனது விருப்­பத்தை எல்­லோ­ருக்கும் திணிக்க முடி­யா­தல்­லவா. இங்கு மாட்­டி­றைச்சி விற்­பதை தடுக்­கக்­கோரி பெரிய அழுத்­தங்கள் ஏது­மில்லை.

கேள்வி: நீங்கள் நோன்பு நோற்கப்போவதாக அறிவித்திருந்தீர்கள். நோன்பு பிடித்தீர்களா, உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள முடியுமா?

பதில்: முதலாம் நாள் எனக்கு இல­கு­வாக இருந்­தது. இரண்டாம் நாள் எனக்கு பெரி­தாக கஷ்டம் இருக்­க­வில்லை. முன்றாம் நாள் நோன்பும் சாதா­ர­ண­மா­கவே சென்­றது. ஆனால் நான்காம் நோன்­பன்றும் ஐந்தாம் நாளன்றும் தவ­று­த­லாக நீர் அருந்­தி­விட்டேன். தவ­றாக நீர் அருந்­து­வது நோன்பை முறிக்­காது என்று தெரிந்­தி­ருந்தேன். ஆகையால், அவ்­விரு தினங்­களும் நோன்பை தொடர்ந்தேன்.நோன்பு நேர அட்­ட­வ­ணையை கைய­டக்கத் தொலை­பே­சியில் வைத்­தி­ருக்­கிறேன். அதன்­படி நோன்பு பிடிப்­பதை பேணு­கிறேன். இந்த நேர அடிப்­ப­டையில் நேற்று (கடந்த ஞாயி­றன்று) முன்னாள் சபா­நா­யகர் எம்.எச்.முஹம்­மதின் பேரர்­க­ளோடு வீட்டில் நோன்பு துறந்தேன். நோன்பு நோற்­பதால் உட­லுக்கு புத்­து­ணர்ச்சி கிடைக்­கி­றது. நோன்பு இருப்­பதால் உடம்­பி­லுள்ள மேல­திக கொழுப்பு இல்­லா­ம­லாக்­கப்­ப­டு­கின்­றது.

கேள்வி: முஸ்லிம்கள் இறை பொருத்தத்திற்காக நோன்பு நோற்கின்றார்கள். நோன்பு நோற்பதால் உங்களின் எதிர்பார்ப்பு என்ன?

பதில்: இலங்கை தாய­கத்தில் பௌத்­தர்­க­ளா­கிய நாங்கள் மூத்த சகோ­த­ரர்கள், இளைய சகோ­த­ரர்களை பொறுப்­புடன் பார்த்­துக்­கொள்­வது மூத்த சகோ­த­ரர்­களின் கட­மை­யாகும். அவர்­க­ளுடன் யுத்தம் செய்­வதோ, கொல்­வதோ எமது கொள்­கை­யாக இருக்­க­லா­காது. அவர்­களை அர­வ­ணைக்க வேண்டும். எல்லா முஸ்­லிம்­களும் அடிப்­ப­டை­வா­திகள் அல்லர். அப்­படி கூறு­வது தவ­றாகும். எல்லா சமூ­கத்­திலும் கடும்­போக்­கு­வா­திகள் இருக்­கின்­றனர். உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தலின் பின்னர் நீண்ட கால­மாக ஒன்­றி­ணைந்து வாழ்ந்த முஸ்­லிம்­க­ளுக்கும் சிங்­க­ள­வர்­க­ளுக்கும் முரண்­பா­டுகள் தோற்­று­விக்­கப்­பட்­டது. முஸ்­லிம்­களின் கடைகள் எரிக்­கப்­பட்­டன. இந்­நி­லை­மையை ஏற்­ப­டுத்­தி­ய­வர்கள் அர­சி­யல்­வா­தி­களே. நியூ­ஸி­லாந்து பிர­த­மரைப் போல், முஸ்லிம் மக்­க­ளுடன் ஒன்­றி­ணைந்து அந்­நி­யோன்­னி­ய­மாக இருப்­பது எப்­படி என்று முன்­மா­தி­ரி­யாக வாழ்ந்து காட்டும் பொறுப்பு எனக்கு இருக்­கி­றது. முஸ்­லிம்­க­ளுடன் மட்­டு­மல்ல, தமி­ழர்­க­ளுடன் ஒன்­றி­ணைந்து அவர்­க­ளுடன் தைப்­பொங்கல் கொண்­டா­டவும் இருக்­கிறேன். நான் நோன்பு இருப்­பதன் பிர­தான நோக்கம், இலங்­கை­யி­லுள்ள எல்லா சமூ­கத்­த­வர்­க­ளி­னதும் உணர்­வு­களை புரிந்து கொள்­வ­தற்­கே­யாகும். சிங்­கள பௌத்­த­னாக இருந்­து­கொண்டு ரெஹான் எங்­க­ளுடன் இணைந்து நோன்பு நோற்­கிறார் என்று முஸ்­லிம்கள் கூறு­கின்­றார்கள் அல்­லவா? சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் கூடு­த­லா­ன­வர்கள் இவ்­வா­றான கருத்­து­களை பகிர்ந்­தி­ருந்­தனர்.

கேள்வி: நீங்கள் நோன்பு நோற்பது குறித்து பகிரங்கமாக அறிவித்த பின்னர் முஸ்லிம் சமூகத்திடமிருந்து எவ்வாறான வரவேற்புகள் கிடைத்தன?

பதில்: திரு­கோ­ண­மலை, பெந்­தொட்ட, பேரு­வளை, கொழும்பு, பாசி­குடா என நாட்டின் பல பகு­தி­க­ளி­லி­ருந்தும் நூற்­றுக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் தினந்­தோறும் எனது தொலை­பே­சிக்கு அழைப்பு எடுக்­கின்­றனர். எனது வீட்­டுக்கு வந்து வாழ்த்து தெரி­விக்­கின்­றனர். மாலை­யா­கும்­போது பலர் நோன்புக் கஞ்சி எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறார்கள். அதிகாலையில் உணவு உட்கொள்வதற்கு அழைப்பு விடுக்கின்றனர். நோன்பு துறப்பதற்கு வரச்சொல்கின்றனர். 30 நாட்கள்தான் இருக்கிறது. ஆனால், நூற்றுக் கணக்கானோர் அழைப்பு விடுக்கின்றனர்.

கேள்வி: நோன்பு நோற்க, துறப்பதற்கான ஏற்பாடுகள் எப்படி இருக்கிறது?

பதில்: எனக்கு அதிகாலையில் சாப்பிட்டால் கேஸ் ரைட்டிஸ் அதிகரிக்கும், அதனால், பேரீத்தம் பழங்களும் பாலும் உட்கொள்வேன். நோன்பு துறந்த பின்னர் கஞ்சி, பலூடா உள்ளிட்ட உணவுகளை உட்கொள்வேன். முதலாம், இரண்டாம் நோன்புக்கு 4.35 மணியாகும்போதுதான் விழித்தெழுந்தேன். எனினும், உடனடியாக பிரிஜ்ஜில் இருந்த பேரீத்தம் பழங்கள் மற்றும் பால் என்பவற்றை உட்கொண்டேன்.

கேள்வி: சிங்கள புதுவருடமும் நோன்பு ஆரம்பித்ததும் ஒரே நாளாகும். அப்படியான நிலையில் உங்களின் புதுவருட சடங்குகளை எப்படி ஒழுங்குப்படுத்திக் கொண்டீர்கள்?

பதில்: எங்கள் வீட்­டில்தான் எமது குடும்ப புது­வ­ருட சடங்­குகள் இடம்­பெற்­றன. அனைத்து சடங்­கு­க­ளிலும் கலந்­து­கொண்டேன். உண­வு­களை மாத்­திரம் வேறாக எடுத்து வைத்து நோன்பு துறக்கும் நேரத்தின் பின்னர் உட்­கொண்டேன். இது கொஞ்சம் கஷ்­ட­மா­கத்தான் இருந்தது.

கேள்வி: சில தினங்கள் நோன்பு நோற்றுள்ளீர்கள். அந்த அனுபவத்தை வைத்து நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: நோன்பு காலம் மிகவும் கஸ்­ட­மான காலம். அத்­தி­யா­வ­சிய செயற்­பா­டு­களை தவிர்ந்­து­கொள்ள வேண்­டிய நாட்கள் இவை. ரமழான் நோன்பு முக்­கி­ய­மான வைப­வ­மாகும். உங்­க­ளுக்கு பெரும் அருட்­கொ­டை­யா­கத்தான் நோன்பு கிடைத்­தி­ருக்­கி­றது. அதனை சரி­யாக பயன்­ப­டுத்திக் கொள்­ளுங்கள். அனை­வ­ருக்கும் ரம­ழானின் பயன்கள் முழு­மை­யாக கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.- Vidivelli ,எஸ்.என்.எம்.சுஹைல், எம்.ஆர்.எம்.வஸீம்

1 comment:

  1. Very good exemplary politician, he should enter the national level leadership to lead this country forward...

    ReplyDelete

Powered by Blogger.