Header Ads



ஜனாஸாக்களை அடக்க அதிகாரிகள், வேண்டுமென்றே தாமதப்படுத்துகின்றனர் - ஹலீம் Mp


போதிய வழிகாட்டுதல்கள் இல்லை என தெரிவித்து, உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கிய வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதை வேண்டுமென்று அதிகாரிகள் தாமதப்படுத்துகின்றனர் என எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது

கண்டியில் ஊடகவியலாளர்களிற்கு கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்எச்ஏ ஹலீம் இதனை தெரிவித்துள்ளார்.

உடல்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தாமதப்படுத்திவருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி யார் என்பதை உள்ளுர் அதிகாரிகள் கண்டுபிடிக்க தவறியுள்ளதால் சர்வதேச விசாரைணகள் அவசியம் என எதிர்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

; 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு குறித்து மக்களிற்கு நம்பிக்கை காணப்பட்ட போதிலும் எனினும் அது எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு உண்மைகளை கண்டுபிடிக்கவில்லை என்பது அறிக்கை மூலம்; தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் யார் உள்ளனர் யார் தற்கொலை குண்டுதாரிகளிற்கு உதவினார்கள் என்பதை மக்கள் அறிந்துகொள் விரும்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையால் நாடு திருப்தியடைய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.