8 மாத குழந்தையை அடித்து, துன்புறுத்திய தாய் கைது - சொந்த சகோதரனே வீடியோ வெளியீடு
யாழ்ப்பாணத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடம்பெற்ற வீட்டுக்கு இன்று காலை சென்று கைது செய்தனர்.
விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் தாயார் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கணவர் அரபு நாடு ஒன்றில் தொழில்வாய்ப்புப் பெற்றுச் சென்ற நிலையில் அவர் பிள்ளையை எப்போதும் அடித்துத் துன்புறுத்துவதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
அதனாலேயே இதனை வெளிக்கொண்டு வருவதற்காக பெண்ணின் சகோதரனே காணொளிப் பதிவு எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவர் தனது குழந்தை தடியால் அடித்துத்தும் ஒரு கையைப் பிடித்துத் தூக்கிச் சென்றும் இரக்கமின்றித் துன்புறுத்தும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது.
அனைவரின் மனதையும் பதறவைக்கும் அந்த காணொளி தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்கவேண்டும் என்பதே அனைவரது கருத்தாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மனச்சிதைவு ஏற்பட்ட தாய்மார்கள் அதிகமானவர்கள் இருக்க்கூடும் எனவே உறவுகள், சொந்தங்கள்,அயலவர்கள் அவதானமாக இருப்பது மிக மிக அவசியமாகும்.
ReplyDeleteகுழந்தைகளை பயமுறுத்துவதற்காக கையில் காம்பை எடுப்பது குற்றமல்ல கம்பால் அடிப்பது தான் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்வதற்கு சமம் இதனால் இந்த தாய்க்கு மன நோய்கள் இருக்கலாம்
ReplyDeleteWell saed Brother Suhaib.. Very True...
ReplyDelete