அடலுகம பிரதேச மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
அடலுகம பிரதேச மக்கள் சுகாதார பிரிவினருக்கு ஆதரவளித்து அவர்களின் பிரதேசங்களை பாதுகாத்தக் கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பல நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தன்னிச்சையாக வாழும் ஒரு குழுவின் செயற்பாடுகள் காரணமாக முழு களுத்துறை மாவட்டமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இன்று (04) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இராணுவத் தளபதி இதனை தெரிவித்தார்.
Post a Comment