Header Ads



முஸ்லிம்களின் ஜனாஸாவை நல்லடக்கம்செய்ய, வலியுறுத்திய வேலுகுமார் Mp க்கு நன்றி


(தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா)

இலங்கை முஸ்லிம்களின் மதக் கடமைகளில் ஒன்றான ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில்  தொடர்ந்தும் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுவருகின்ற நிலையில் இன்றை பாராளுமன்றத்திலும்  மலையகத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் அவர்கள் தனக்கு ஒதுக்கப்பட்ட 5 நிமிடங்களுக்குள் 3 நிமிடத்தை முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கத்துக்கு உதவி செய்யுங்கள் என்று அரசாங்கத்தை வலியுறுத்தியமைக்கு இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமது நன்றிகளை அவருக்கு தெரிவிப்பது பொறுத்தமாகும்.

சிறுபான்மை தமத சகோதர சமூகத்தின் மதக் கடமைகள் தொடர்பில் நன்றாக அறிந்து வைத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அவர்கள் இலங்கையின் முஸ்லிம்களின் வரலாற்று புத்தகத்தில் தமது பெயரையும பதித்துள்ளதுடன்,நேர்மையான அரசியல் வாதியாக மாறியுள்ளதையும் எம்மால் கோடிட்டு காட்டமுடிகின்றது.

ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஜனாஸா நல்லடக்கத்துக்கு எதிராக பேசும் இந்த சந்தர்ப்பத்தில் முஸஸ்லிம்களுக்கு சார்பாகஎதிர் தரப்பில் இருந்து  கடும் தொனியில் அரசாங்கத்தின் பார்வையினை ஈர்க்கச் செய்தமையானது மிகவும் அவதானத்துக்குரியதாகும்.இது போன்ற இன்னும் பல சிறுபான்மை அரசியல் தலைவர்கள் பாராளுமன்றத்திலும்,வெளியிலும் தமது கருத்துக்களை முஸ்லிம்களுக்கு ஆதரவாக தெரிவித்துவருகின்ற நிலையில் இனவாத சிந்தனைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் உறுப்பினர்களுக்கு மத்தியில் தமது சமூகத்தின் பிரச்சினைகளை பேசுவதற்கான சந்தர்ப்பத்தில் எமது முஸ்லிம் சமூகத்தின் தற்போது காணப்படும் இடை வெளியினை நிரப்பும் வகையில் ஆற்றிய உரைக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அவர்களுக்கு நன்றியினையும் பாராட்டினையும் முஸ்லிம் சமூகம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. இந்த நபர் வெற்றிபெற்றது முஸ்லிம்களின் வாக்குகளினால். அந்த நன்றி கடன் இவருக்கு உண்டு

    ReplyDelete

Powered by Blogger.