Header Ads



இராணுவத்தளபதி முன்வைத்துள்ள கோரிக்கை


வீட்டில் இருக்கின்ற முதியவர்கள் மற்றும் நீண்டகால நோய்வாய்ப்பட்டவர்கள், ஏதேனும் அசௌகரியங்களுக்கு உட்படுவார்களாக இருந்தால், அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் ஜனாதிபதியும் அவதானம் செலுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அண்மைய நாட்களில் வீட்டில் மரணிக்கின்ற முதியவர்கள் மற்றும் நெடுநாள் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படுகின்ற பீ.சீ.ஆர்.பரிசோதனைகளில், சிலருக்கு கொவிட்19 தொற்று இருக்கின்றமை தெரியவந்தது.

இந்தநிலையில் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ள முதியவர்கள் மற்றும் நெடுநாள் நோயாளிகள் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்வதன் மூலம், அவர்களது நலன்தொடர்பில் அவதானம் செலுத்த முடியும் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.