Header Ads



கல்லொழுவை அல் அமான் மகாவித்தியாலயத்திற்கு, பழைய மாணவருடைய சொந்த நிதியில் கேட்போர் கட்டிடம்


- பௌசுல் அலீம் -

மினுவாங்கொட கல்லொழுவை அல் அமான் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள   கேட்போர் கூடத்திற்கு அடிக்கல் நாட்டும்  நிகழ்வு நேற்று -26-  நடைபெற்றது.

 அல் அமான் முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் அல் ஹாஜ் ரியல் பௌஸ் அவர்களின் சொந்த நிதியில் அன்பளிப்பாக இக் கட்டிடம் அமைய இருப்பதாக அல் அமான் முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் அதிபர் எம்.டி.எம் ஆசிம் வைபவ உரையில் குறிப்பிட்டார். மேலும் அதிபர் உரையில் தெரிவித்ததாவது ஒரே நேரத்தில் 800 தொடக்கம் ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் இந்த கேட்போர் கூடம் அமைய இருப்பதாகவும் இக் கட்டிடம் மூன்று மாடிகளைக் கொண்டதாகவும் இருக்கும் என தெரிவித்தார்.

 இவ் நிகழ்வில் மினுவாங்கொட வளையம் கல்விப் பணிப்பாளர் திரு மல்வாராயிசி, உதவிக் கல்விப் பணிப்பாளர் ( தமிழ் மொழி) ஏ.ஏ.எம் ரிஸ்வி, கல்லொழுவை ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக தலைவர் அல் ஹாஜ் எம் முனாஸ், மற்றும் பாடசாலை அதிபர் எம்.டி.எம் ஆசிம், உப அதிபர் எம். ரிம்ஸான், என பல முக்கியஸ்தர்களும், பழைய மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments

Powered by Blogger.