சுகாதார அமைச்சர் கடலில் குதிக்கப்போகின்றார் என்பதை அறிந்தே திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின
சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கடலிற்குள் குதிக்கப்போகின்றார் என்ற தகவலை அறிந்தே திமிங்கிலங்கள் கரைக்குவந்தன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் தன்னை தியாகம் செய்வதற்கு முன்னர் தனது பணியை சரிவர செய்யவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாவிட்டால் சுகாதார அமைச்சருக்கு கடலிற்குள் குதிப்பதை தவிரவேறுவழியில்லை என நளின்பண்டார தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கடலிற்குள் குதிக்கப்போகின்றார் என்ற செய்தியை கேட்டே பல திமிங்கிலங்கள் கரைக்கு வந்தன என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக தன்னை தியாகம் செய்வதற்கு தயார் என சுகாதார அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
Post a Comment