காடழிப்பைக் கண்காணிக்க விமானப்படை, நில அபகரிப்பில் ஈடுபடுபவர்களை கைதுசெய்ய சிறப்பு பிரிவு
காடழிப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு விமானப்படை நிறுத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இதனை தெரிவித்துள்ளார். காடழிப்பைக் கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவம் மற்றும் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதன் காரணமாக இலங்கை விமானப்படை (SLAF) தங்கள் விமான சொத்துக்களைப் பயன்படுத்தி காடழிப்பை கண்காணிக்க நிறுத்தப்படும்.
இந்நிலையில், மாவட்ட செயலாளர்கள், அரசு முகவர்கள் விழிப்புடன் இருப்பதுடன், சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக நிற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், நில அபகரிப்பில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்ய சிறப்பு பிரிவு நிறுவப்பட்டுள்ளது என்றும் அவர் பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Good
ReplyDeleteகாடு வெட்டி காணி பிடிப்பவர்களை 10 வருடங்களேனும் ஜெயிலில் போடவேண்டும்.
காடழிப்பை பலவந்தமாக செய்பவர்கள், அதிகாரமும், அரசியல் திமிரும் கொண்ட மந்தி(ரி)கள் என்பது அரச அதிகாரிகளுக்கும் அதில் ஆர்வம் கொண்டவர்களுக்கும் நன்றாகத் தெரியும். இனி யார் இங்கு யாரை ஏமாற்றுகின்றார்கள் என்பது தான் இன்னும் பொதுமக்களுக்குப் புரியவில்லை.
ReplyDelete