திகனயில் நிலநடுக்கம் ஏற்பட்டதா..? குலுக்கல் உணரப்பட்டதாக அறிவிப்பு
கண்டியில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி - திகன பகுதியில் இரவு 8.40 மணியளவில் பாரிய சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பகுதியை சேர்ந்த மக்களால் அது உணரப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளன.
இது குறித்து தேசிய புவியியல் ஆய்வு மையத்தின் தலைவர் அருன வால்பொல கருத்து வெளியிடுகையில், நிலநடுக்கம் ஏற்படவில்லை. சிறிய அளவில் குலுக்கல் உணரப்பட்டதாகவும், அது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment