Header Ads



தோனியும், ரெய்னாவும் ஓய்வை அறிவித்தனர் - கிரிக்கெட் உலகம் ஆச்சரியம்


இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில்  இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் தலைவரும் இந்திய அணிக்கு இரு முறை உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்தவருமான மகேந்திர சிங் தோனி சர்வசே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டர் கிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக மகேந்திர தோனி உள்ளார்.

ஏற்கெனவே, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய நிலையில், தற்போது அவர் அனைத்துவகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.


2


இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

தோனியின் ஓய்வு முடிவு பற்றிய இன்ஸ்டாகிராம் பதிவைப் பகிர்ந்த ரெய்னா, தன்னுடைய ஓய்வு முடிவையும் அதில் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா இறுதியாக கடந்த 2018-இல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் விளையாடினார். 

இவ்வாறு சுரேஷ் ரெய்னா, தோனியுடன் இணைந்து ஓய்வு முடிவை அறிவித்திருப்பது கிரிக்கெட் உலகை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் பயிற்சிக்காக சுரேஷ் ரெய்னாவும், தோனியும் நேற்றையதினம் சென்னை வந்துள்ள நிலையில், இவ்வாறு ஓய்வு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.