மின்சாரத் தடை - சதிமுயற்சியா என்ற கோணத்திலும் விசாரணை
மின்தடை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார்.
ரவலப்பிட்டி மின் நிலையத்தில் காணப்பட்ட பாரிய கோளாறை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படாததை கருத்தில் கொண்டு சதி முயற்சி இடம்பெற்றுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன என அதிகாரியொருவர் டெய்லிமிரருக்கு தெரிவித்துள்ளார்.
பாரிய மின்தடை ஏற்படுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததை கருத்தில் கொள்ளும் போது சதிமுயற்சிகான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது என அதிகாரிகள் கருதுகின்றனர் என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.
Post a Comment