Header Ads



பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட பார்ட்டி 5 பெண்கள் உட்பட 20 பேர் கைது!

பாணந்துறை மில்லெனிய பகுதியில் வைத்து போதைப்பொருளுடன் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 


பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இதில் 5 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதன்போது, ஹெரோயின், கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இதேவேளை, கடந்த கலங்களிலும் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் போதைப் பொருட்களுடன் இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.