Header Ads



வதந்திகளை நம்ப வேண்டாம் - இராணுவத் தளபதி

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நோய் சமூகமயப்படுதலைத் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று தொடர்பாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வழங்கும் செய்திகளை மாத்திரம் நம்புமாறும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மக்களைக் கேட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.