Header Ads



’ரணிலுக்கு ஒத்துழைத்திருந்தால் சஜித் ஜனாதிபதியாகியிருப்பார்’

ஐக்கிய தேசிய கட்சிக்குள்ள பல்வேறு சூழ்ச்சிகள் காணப்பட்டதென அக்கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், 

ஐக்கிய தேசிய கட்சிக்கு பல்வேறு சூழ்ச்சிகள் காணப்பட்டனவெனவும், கட்சியின் தலைமைத்துவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டு பயணிக்கும் செயற்பாடுகளிலிருந்து கட்சி உறுப்பினர்கள் சிலர் விலகியிருந்தாகவும் தெரிவித்தார். 

தனிக் குழுக்களை அமைத்துக்கொண்டு கட்சிக்குள் செயற்பட முடியாதென தெரிவித்த அவர்,  கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சி உறுப்பனர்கள் ஆதரவாக இருந்திருந்தால் 2005 ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொண்டிருப்போம் என்றும் சாடினார்.

அத்தோடு, அந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிக்கொண்டு இரு தடவைகள் நாட்டை ஆண்டுவிட்டு மீண்டும் சஜித்தை ஜனாதிபதியாக்கியிருக்க முடியுமெனவும் தெரிவித்தார். 

அதனால் ஐக்கிய தேசிய கட்சியின் ஒற்றுமை சிதைந்து போன சகல சந்தர்ப்பங்களில்,  கட்சிக்கு தோல்வியே கிடைத்துள்ளதெனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.