Header Ads



பாடசாலைகள் எப்போது, மீண்டும் ஆரம்பமாகும்...?


பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக நாளை வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான செயலணியுடன் கலந்துரையாடித் தீர்மானம் எடுக்கவுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, பாடசாலைகள் மீளத் திறக்கப்படாவிடில் வீடுகளில் இருந்து மாணவர்களுக்குப் பாடங்களை நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு புதிய ஆலோசனை அறிக்கை ஒன்றை விநியோகிப்பதற்குத் திட்டமிடப் பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர கூறியுள்ளார்.

பாடசாலைகளை மீளத்திறப்பதில் தாமதம் ஏற்பட்டால் உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளும் தாமதமாகுமென அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.