பிரசன்ன ரணதுங்க 8 ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெறவில்லை - தயாசிறி கூறியபின்னரே நான் அறிந்துகொண்டேன்
மக்களை ஏமாற்றி பெற்றுக்கொள்ளும் ஆட்சி அதிகாரத்தை நீண்டகாலம் முன்னெடுத்துச் செல்ல முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க 8 ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெறவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறுகிறார். அவர் கூறிய பின்னரே இந்த தகவலை நான் அறிந்துக்கொண்டேன்.
வேட்பாளர் பட்டியல்களை பாருங்கள். உயர்தரத்திலாவது தேர்ச்சியடைந்துள்ளார்களா என்று தேடிப்பாருங்கள் என ஹரின் பெர்னாண்டோ வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனைக் கூறுபவரும் எட்டாம் வகுப்பாவது படித்திருப்பாரா என்பதில் வாசகர்களுக்கு பாரிய சந்தேகமிருக்கின்றது.
ReplyDeletePADITHIRUNDAAL, ARIVIRUNDAAL, MAKKALAI
ReplyDeleteANIYAAYAMAAKA KOLAI SHEIYA VITTUVITTU
DHUMMAA IRUPPAANAA??