ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மனு - 22ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்பு என்று குற்றம் சுமத்தி தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, மேலதிக சமர்ப்பணங்களுக்காக எதிர்வரும் 22ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி தவராஜா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இன்று மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, வாய்மூல சமர்ப்பணங்களை மேற்கொண்டார். இதன்தொடர்ச்சியை அவர் எதிர்வரும் 22ம் திகதி மேற்கொள்வார்.
கடந்த வருடம் ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் ஏப்ரல் மாதம் 14 ம் திகதி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment