Header Ads



தன்னை சுற்றி இருப்பவர்கள் குறித்து, ஜனாதிபதி கவனமாக இருக்க வேண்டும்: ஆனந்த தேரர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சுற்றியும் பேரம் பேசுபவர்கள் மற்றும் ஒற்றர்கள் இருப்பதால், அவர் அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் இன்று -26 நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்த பேரம் பேசும் நபர்களிடம் கவனமாக இருந்தால், கோட்டாபய ராஜபக்சவுக்கு ஜனாதிபதியாக நாட்டை சிறந்த முறையில் நிர்வாகம் செய்ய முடியும்.

சுற்றி இருந்து பேரம் பேசுவோர் மற்றும் ஒற்றர்களின் கதைகளை கேட்டு வேலை செய்ததன் காரணமாகவே ஆட்சியில் இருந்த அனைத்து தலைவர்களுக்கும் தவறியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளர் ஹரின் பெர்னாண்டோ அண்மையில் பேராயர் தொடர்பாக தெரிவித்திருந்தமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆனந்த தேரர், தமது துறவிகள் குரல் அமைப்பு இதனை நிராகரிப்பதாக கூறியுள்ளார்.

பேராயர் வேறு மதத்தலைவர் என்ற போதிலும் பௌத்த தலைவர்களால் செய்ய வேண்டியதை அவர் செய்து வருகிறார்.

மற்றவர்களை விமர்சிக்கும் நபர்களை தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் வைத்திருப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க மக்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.