Header Ads



மண்வெட்டியை ஒளித்து வைத்தவர்களுக்கு, கோடரியின் மூலம் பாடம் புகட்டுவோம் - அனுஷா


அபிவிருத்தி என்னும் பெயரில் எம் மக்களின் தனித்துவத்தை அழித்ததுடன், மண்வெட்டியை ஒளித்து வைத்து இன்னொரு கட்சியில் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு கோடரியின் மூலம் தக்க பாடம் புகட்டுவோம் என அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் கோடரி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரும், மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும், சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் நேற்றைய தினம் வட்டவளை பகுதியில் தமது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.