Header Ads



கல்முனையில் ஜும்ஆ தொழுகை


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காராணமாக மிக நீண்ட நாட்களாக்த்தடை செய்யப்பட்டிருந்த வெள்ளிக்கிழமை ஜும் ஆத்தொழுகைகள்  கல்முனைப்பிரதேசத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்ப்ட்டு இன்று சகல் பள்ளிவாயல்களிலும்  தொழுகைகள் நடாத்தப்பட்டன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த.மார்ச்  மாதம் நடுப்பகுதி முதல் மூடப்படிருந்த பள்ளிவாயல்களை மீண்டும் திறப்பதற்கான அனுமதியை சுகாதாரதுறையினர் பல நிபந்தனைகளுடன் கடந்த வாரம் வழங்கி இருந்தனர்.

ஆனால் கூட்டு தொழுகைகள் மற்றும் ஜும் ஆத்தொழுகைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை .இருப்பினும் இந்த வாரம் கூட்டு தொழுகைகள் மற்றும் ஜும் ஆத்தொழுகைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டதையடுத்து இன்று கல்முனைப்பிரதேசத்திலுள்ள ஜும் ஆப் பள்ளிகள் மற்றும் தக்கியாக்களிலும் சுகாதாரத்துறையினர் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா மற்றும் வக்பு சபை ஆகியவற்றின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு ஏற்ப  சமூக இடை வெளி பேணப்பட்டு  ஜும் ஆத்தொழுகைகள் நடாத்தப்பட்டன .

இதே வேளை முன்னர் போலல்லாது குத்பாப்பேருரைகள் அரை மணித்தியாலத்திற்குள் சுருக்கப்பட்டு தொழுகைகள் நடாத்தப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

No comments

Powered by Blogger.