கருணாவை அவரின் அனைத்து போர்க் குற்றங்களிற்காகவும் விசாரணை செய்க - சர்வதேச மன்னிப்புச்சபை
இலங்கையின் மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தின் போது விநாயக மூர்த்தி முரளீதரன் இழைத்த அனைத்து யுத்தக்குற்றங்களிற்காகவும் அவரை விசாரணைக்குட்படுத்தவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரிவு தனது டுவிட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையின் மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தின் போது விநாயகமூர்த்தி முரளீதரன் இழைத்த அனைத்து குற்றங்களிற்காகவும் அவரை விசாரணைக்குட்படுத்தவேண்டும் பொறுப்புக்கூறல் இடம்பெறவேண்டும் எனசர்வதேச மன்னிப்புசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
2008 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டவேளை அவரை நாடாளுமன்றத்திலிருந்து அகற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததாக மன்னிப்புச்சபை நினைவுபடுத்தியுள்ளது.
கருணா அவரது பார}தூரமான மனித உரிமை மீறல்களிற்காக ,வலுவான சுயாதீன விசாரணை மூலம் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
Post a Comment