யாழ் செவளப் பள்ளிவாசலில், ஜும்ஆ தொழுகை - வரலாற்றில் முதற் தடவை (படங்கள்)
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காராணமாக மிக நீண்ட நாட்களாக்த்தடை செய்யப்பட்டிருந்த வெள்ளிக்கிழமை ஜும் ஆத்தொழுகைகள் இன்று -19- நடாத்தப்பட்டன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த.மார்ச் மாதம் நடுப்பகுதி முதல் மூடப்படிருந்த பள்ளிவாயல்களை மீண்டும் திறப்பதற்கான அனுமதியை சுகாதாரதுறையினர் பல நிபந்தனைகளுடன் கடந்த வாரம் வழங்கி இருந்தனர்.
ஜும் ஆப் பள்ளிகள் மற்றும் தக்கியாக்களிலும் சுகாதாரத்துறையினர் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா மற்றும் வக்பு சபை ஆகியவற்றின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு ஏற்ப சமூக இடை வெளி பேணப்பட்டு ஜும் ஆத்தொழுகைகள் நடாத்தப்பட்டன .
அந்தவகையில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றில் முதற் தடவையாக இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் செவளப் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகை நடைபெற்றுள்ளது.
Masahallah good moments!
ReplyDelete