Header Ads



12ம் திகதி முதல் மதத்தலங்களில் வழிபாடுகளில் ஈடுபட அனுமதி - 50 பேருக்கு மட்டும் அனுமதி


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத வழிபாடுகளில் ஈடுபடுவது குறித்து, அமுல்படுத்தப்பட்டிருந்த கெடுபிடிகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12ம் திகதி முதல் மத வழிபாட்டு தளங்களை திறந்து வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு 50 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நேரத்தில் சமூக இடைவெளியை பேணியவாறு ஐம்பது பேர் மட்டும் வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

50 பேருக்கு சமூக இடைவெளியுடன் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு போதியளவு வசதி இல்லாவிட்டால் அதனை விடவும் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே வழிபாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.