தேர்தலுக்கு பின் UNP யின், அதிகாரத்தை கைப்பற்றுவோம் - நளின்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மிகப் பெரிய வெற்றியை பெறும் அந்த கட்சியின் வேட்பாளரும் குருணாகல் மாவட்ட வேட்பாளருமான நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
மிகப் பெரிய வெற்றியின் பின்னர் தமது அணியினர் ஐக்கிய தேசியக்கட்சியின் அதிகாரத்தையும் கைப்பற்றும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பொதுத் தேர்தலுக்கு பின்னர், ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவுக்குள் செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திபொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் சஜித் பிரேமதாச உட்பட அவரது அணியினர் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல எனவும் அவர்களுக்கு கட்சியில் எந்த உரிமையும் இல்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment