Header Ads



கட்டாரிலிருந்து நாடு திரும்பவிருந்தவர்களின் பயணம் இடைநிறுத்தம்

கட்டாரிலிருந்து நாடு திரும்பவிருந்தவர்களின் பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் -26- கட்டாரிலிருந்து ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு திட்மிட்டிருந்தனர்.எனினும், குறித்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிக அடிப்படையில் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரால் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அண்மையில் குவைட்டிலிருந்து நாடு திரும்பிய 466 இலங்கையர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதில் 70 பேர் வரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து கட்டாரிலிருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கட்டாரிலிருந்து 273 இலங்கையர்களை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றின் மூலம் நாட்டுக்கு அழைத்து வரத் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.