Header Ads



தம்புள்ளையில் உயிரிழந்த இராணுவ வீரர் தொடர்பில், வைத்திய பரிசோதனை அறிக்கை வெளியானது

தம்புள்ளையில் உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என வைத்திய பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தம்புள்ளை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

கொஸ்கம - ஹங்வெல்ல இராணுவ முகாமில் பணியாற்றி வந்த இராணுவ வீரர் ஒருவர் தம்புள்ளை பேருந்து நிலையத்தில் வைத்து நேற்று திடீர் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

இதன்போது கொரோனா அச்சம் காரணமாக அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வராத நிலையில், அங்கிருந்த யுவதிகள் மற்றும் இளைஞர்கள் இணைந்து குறித்த இராணுவ வீரரை வைத்திசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையிலேயே, அவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் உடல் இராணுவத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இதேவேளை, குறித்த இராணுவ வீரர் சிறு வயதிலிருந்து நோய்வாய்ப்பட்டவர் என அவரது உறவினர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.