ரணிலின் காபன் பிரதியாக செயற்படும் சம்பிக்க, அழிவுக்கு பொறுப்புக் கூறவேண்டிய நபராக மாறிவிட்டார்
கடந்த சில தசாப்தங்களில் இனம், தேசியம், சுற்றாடல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக சிறப்பாக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போது சுற்றாடல் அழிவுக்கு பொறுப்புக் கூற வேண்டிய நபராக மாறியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சுற்றாடலை அழித்து கொங்கிரீட் நிர்மாணிப்புகளை மேற்கொள்வதை அபிவிருத்தி என அவர் தற்போது நம்புவதாகவும் ரதன தேரர் கூறியுள்ளார்.
சம்பிக்க ரணவக்க தற்போது புதிய தாராளமயம் மற்றும் புதிய தாராளமய பொருளாதாரத்திற்கு தீவிரமாக அடிமையாகியுள்ளார்.
அவர் ரணில் விக்ரமசிங்கவின் காபம் பிரதியாக மாறிவிட்டார். இது சம்பந்தமாக வருத்தப்படுவதாகவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஒரே அணியில் இருந்த அத்துரலியே ரதன தேரர் மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் தற்போது வெ்வவேறு அணிகளை பிரதிநித்துவப்படுத்துகின்றனர்.
ahhha niyamai rathane
ReplyDelete