மர்ஹும் மொஹமட் ஜமாலின் குடும்பம், 36 நாட்களின் பின் வீட்டுக்கு திரும்பினர்
நீர்கொழும்பு - பலகத்துறையில் வபாத்தாகி தகனம் செய்யப்பட்ட, மொஹமட் ஜமாலின் குடும்பத்தினர் ஓரு மாதத்திற்கும் மேலாக மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று 7 ஆம் திகதி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மொஹமட் ஜமாலின் ஜனாஸா எரியூட்டப்பட்ட விவகாரமானது முஸ்லிம்களின் மனங்களை வேதனைப்படுத்தியிருந்த நிலையில், அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 42 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களில் சிலர் முன்னர் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டிருந்தனர்.
அந்த வகையில் இன்று வியாழக்கிழமை அவரது மொஹமட் ஜமாலின் குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment