Header Ads



குவைத்திலிருந்து நாட்டுக்கு வந்து, தனிமைப்படுத்தலில் இருந்த 12 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 12 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

குறித்த 12 பேரும் குவைத் நாட்டில் இருந்து வருகை தந்து திருகோணமலை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தட்டுள்ளவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1106 ஆக  அதிகரித்துள்ளது. 

இதுவரை 674 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலும் 423 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.